வானம் பூமி, மற்றும் அவற்றின் மற்ற துணைத்தொகுதிகளும் சிருஷ்டிக்கப்பட்டுமுடிந்தன . ஏழாம் நாள் உதித்தது . பரமபிதா ஓய்வெடுத்தபடி தம் சிருஷ்டிகளைக் கவனித்து மகிழ்ச்சி அடைந்தார். ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.சுற்றிலும் கண்ணோட்டமிட்டார். இன்னும் சில படைப்புகள் பாக்கியிருந்தன.
எல்லா விதமான செடிகள். எல்லா விதமான பூண்டுகள். அவை இல்லை. ஏனெனில் பரமபிதா பூமியின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை.
அப்படி அது பெய்தாலும் நிலத்தைப் பண்படுத்த ஒரு ஜீவன் -மனிதன் இல்லை
மழை பெய்விக்க மூடுபனியை பூமியிலிருந்து எழுப்பினார். அது எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
பரமபிதா தம் கற்பனையால் மனிதனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்மாவானான்.மீண்டும் கர்த்தராகிய பரமபிதா யோசித்தார். இவனை எங்கே குடிவைப்பது?
கிழக்கு என்று வகுத்த திசையிலே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உருவாக்கினார்.மனிதனை அங்கே கொண்டு போய் குடி வைத்தார்.தன படைப்புகளை நிர்வகிக்க ஒரு சிறந்த தந்தைக்கு என்னென்ன யோசனை எல்லாம் உண்டாகுமோ அவை எல்லாம் பராமபிதாவின் சித்தத்தில் உதித்தன.
மனிதன் புசிப்பதற்கு அழகான,நல்ல ,மரங்கள் தேவை அல்லவா? ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச நதி தேவை அல்லவா? உருவாக்கினார். ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.இப்போது ஏதேன் தோட்டத்துக்கு நாலாப்பக்கத்திலிருந்தும் நீர் பாய்ந்தது.
ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அவும் வைத்தார்.
பிறகு கர்த்தர் மனிதனை நோக்கி " நீ தோட்டத்தைப் பண்படுத்து. காவல் இரு. நீ எல்லா மரத்துக்கு கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் மாண்டு போவாய் "என்று கட்டளையிட்டார்.
ஏதேன் தோட்டத்தில் தனிமையாய் உலவும் மனிதனைப் பார்க்கும்போது அவர் மனம் இரங்கிற்று
"இவன் தனிமையில் இருக்கிறான். அது நல்லதல்ல, இவனுக்கு ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" என்றார்.
கர்த்தராகிய பரமபிதா அவனுக்குத் துணை இருக்க எல்லா வகை சகலவித மிருகங்களையும் எல்லா வகைப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கினார்.,
ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் பார்க்கலாம் என்று அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரிகளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்தான். ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அவற்றுக்குப் பேராயிற்று.
அப்போதும் அவன் தனிமை நீங்காததை கர்த்தராகிய பரபிதா கண்டார். ஏற்ற துணை வேறொன்று வேண்டும். ஆதாமுக்கு அயர்ந்த உறக்கம் வரவழைத்தார். அவன் உறங்கத்தொடங்கினான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை உருவி எடுத்தார். பிறகு அந்த வெற்றிடத்தைச் சதையினால் அடைத்தார்.
பரமபிதா தாம் மனிதனிடம் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை அவ னிடத்தில் கொண்டு வந்தார்.
"இவளுக்குப் பெயர் வை"என்று பரமபிதா அவனிடம் கேட்டார்.
"இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனாகிய என்னில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்" என்றான்.
இதன்படி ஒரு மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சிந்தித்தார்.
ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணிகளாயிருந்தார்கள். வெட்கம் என்ற உணர்வை அவர்கள் அறிந்திருக்கவில்லை.எனவே வெட்கப்படாதிருந்தார்கள்.
[தொடரும்]