Saturday, 10 September 2016

விவிலிய நாவல்: 1-2

                                                                  2
கர்த்தராகிய பரமபிதா தான் உருவாக்கிய பூமியைத் திரும்பிப் பார்த்தார். அது ஒன்றுமில்லாத வெறுமையாக இருந்தது.சிருஷ்டியின் ஊக்கம் அவருக்குள் மேலும் பெருக்கெடுத்தது. அவரது அளவே இல்லாத கற்பனை ஆற்றலால் பூமியை மேலும் பொலிவுறச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது 
கர்த்தராகிய பரமபிதா."பூமியே! உன் மீது புல் முளைக்கட்டும்" என்றார். புல் முளைத்தது. 
மேலும் அவரது கற்பனை கிளர்ந்தது.  விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகள்,பூண்டுகளில் இருந்து   தங்கள் விதையையுடைய பழங்களைத் தாங்கி அதே விதமான பழங்களைத் தரும் மரங்கள் இவை உன் மீது முளைக்கட்டும்" என்றார். 
அவரது ஆணைக்குக்கீழ்ப்பட்டு, பூமியில் , தங்கள் இனத்திற்குரிய   விதையைப் பிறப்பிக்கும்  பூண்டுகள், தங்கள் தங்கள் இனத்திற்குரிய தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; 
பரமபிதாஅவை நல்லவை  என்று உணர்ந்தார்.

மீண்டும் மாலை வந்தது. விடியற்காலம் ஆனது.  மூன்றாம் நாள் பிறந்தது.பரமபிதா ஒரு பகல் போலவே மற்றொன்றும் இருப்பதையும், ஓர் இரவு போலவே மற்றோர் இரவும் இருப்பதையும் உணர்ந்தார்.இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட வேறொரு அடையாளம் தேவை அல்லவா? சிந்தித்தார்.
 "வானவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்" என்று கட்டளை இட்டார்.அது அப்படியே ஆயிற்று.. அவை  அடையாளங்கள்,  காலங்கள் , நாட்கள்,  வருஷங்கள்  குறிக்கட்டும் என்று ஆணை பிறப்பித்தார். அவ்வாறே ஆயிற்று. 
கர்த்தராகிய பரமபிதா பகற்பொழுதை    ஆளப் பெரிய ஜோதியான சூரியனையும் இரவுப்பொழுதை  ஆளச் சிறிய ஜோதியான சந்திரனையும் ,நட்சத்திரங்களையும் சிருஷ்டித்தார். .அவை  பூமியின்மேல் அவ்வாறே பிரகாசிக்கத்தொடங்கின. அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; பரமபிதா அது நல்லது என்று கண்டார்.
சாயங்காலமும் விடியற்காலமும் தொடர்ந்தன.  நாலாம் நாள் பிறந்தது. 
மீண்டும் பரமபிதாவின் படைப்பூக்கம் பெருக்கெடுத்தது. பூமியின் மீது புல்லும் பூண்டும் கனி தரும் மரங்களும் மட்டும் போதாது .ஆகாயத்திலும் சமுத்திரத்திலும் உயிர் நடமாட்டம் வேண்டும் என்று எண்ணினார்.

பரமபிதா  நீந்தும் வல்லமை உடைய உயிர்க்கூட்டங்களையும் ,ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், நீர்ப்பெருக்கானது உருவாக்கவேண்டும் என்று கட்டளை இட்டார். மாபெரும் மீன்களும், தங்கள் இனத்திற்குரியவை போன்ற பல்வேறு நீர்வாழ் உயிரிகளும் பிறந்தன.  அடுத்து சிறகுகள் உள்ள பல்வேறு வகைப் பறவைகள் வானில் பறக்கட்டும் என்று கட்டளை இட்டார். அவ்வாறே  பறவைகள் பிறந்தன .
பிறகு பரமபிதா , நீங்கள் பல்கிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள்;, பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். அவ்வாறே அவை பல்கிப் பெருகத்தொடங்கின.
அடுத்த மாலைபொழுது வந்தது. அடுத்து விடியற்காலமாகி பொழுது விடிந்தது.ஐந்தாம் நாள் ஆயிற்று.
பரமபிதாவின் படைப்பூக்கம் மேலும்  பெருக்கெடுத்தது.  "பூமியே உன்னிடம் பல்வகை இனமிருகங்களும், ஊர்ந்து செல்லும் உயிர்களும், காட்டு மிருகங்களும், இனம் இனமாகப்  பிறக்கட்டும் "என்றார்.
அவ்வாறே யாவும் பிறந்தன. பரமபிதா  மகிழ்ச்சி அடைந்தார். பரமபிதாவின் படைப்பூக்கம் மற்றொரு ஊற்றாய்ப் பெருகியது.
                                               
"நமது சாயலாகவும் நமது உருவின்படியும் மனிதனை  உண்டாக்குவோமாக; அவனது இனம் பெருகி அவனது இனத்தினர் சமுத்திரத்தின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக உயிர்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊர்கின்ற  எல்லா உயிர்க்கூட்டத்தையும் ஆளட்டும்" என்று கருதினார்.  
பரமபிதா தமது சாயலில்  மனிதனைச் சிருஷ்டித்தார், அவனுக்குத் துணை வேண்டுமெனக் கருதினார். பெண்ணை உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
அவர்களை நோக்கி:" நீங்கள் பல்கிப்பெருகி, பூமியை நிரப்புங்கள் , அதைக் கீழ்ப்படுத்திக்கொள்ளுங்கள்., சமுத்திரத்தின் மீன்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற எல்லா உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்" என்று  அவர்களை ஆசீர்வதித்தார்.
பறவைகள்,மீன்கள்,விலங்குகள், ஊரும் உயிரினங்கள் என எல்லாவற்றிற்கும் உணவுக்கு வழியமைத்த நிறைவில் எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.  , மறுமாலை வந்து மறுகாலையும் வந்து பொழுது விடிந்தது .
ஆறாம் நாள் ஆயிற்று.
[தொடரும்]

No comments:

Post a Comment